Sunday 11 August 2013

என் புலம்பல்

அப்பா 

ஒரு கல்லை பார்க்க தெய்வம் மேல் ஏறினேன் 

அம்மா 

உணவில் உயிரை ஊட்டியவள் 

வாத்தியார் 


எவனோ ஒருவன் சொன்னதை வழிகாட்டி என் விழி துறந்தவன்  

அக்கா 

விளையாட தாய் வராட்டா தோழி வந்து நம் தலையில் கொட்டுவாள் 

அண்ணன் 

முன்னே வழிகாட்டுவான் பின்னே பொருப்பாற்றுவான் 


தம்பி 

நாம் தோற்கும் போது ஜெயிப்பவன் நம் ஜெயிக்கும் போது தோற்பவன் 


தங்கை 

தாய் கொடுத்த பாசத்தை திருடி சென்றுவிடுவாள் 


நண்பன் 

வாழ்கை என்னதான் அழ வைத்தாலும் அதை நொடியில் சிரிக்க வைப்பான் 

கடவுள் 

இவற்றில் ஏதும் இல்லாதவன் காணும் கனவு 


எதிரி 

நம் வாழ்கையை துணிவுடன் வழி நடத்த வைப்பவன்  



சொந்தங்கள் 

என் வாழ்கையை இவளோ பேர் ஏற்றத்தில் ஏற்றினாலும் கீழே ஆழத்தை காட்டியவன் 




எம் ஜி ஆர் -சிவாஜி 
ரஜினி-கமல் 
விஜய்-அஜித் எவ்வரையோ விரட்ட இன்னொருவர் வந்தார்கள் இவரை விரட்ட காலத்தால் கூட முடியவில்லை 


இன்னமும் பார்த்தாள் அழும் ஒரே காட்சி 











No comments:

Post a Comment